எங்கே முடியுமோ அங்கே தொடங்கிடும் வாழ்வாய்!
மீளாத் துயரம் பலபல கடந்து அமைந்தஇவ் வாழ்வில்!
எங்கெலாம் நாடினேன் அங்கெலாம் காண்பவனே குருவே!
எங்கனம் அறிகிறீர் எமக்கான தேவைகளை கேளாது!
தேவைகளை யறிந்துஎமக்கு அன்பருள் உதவிடும் எந்தையே!
நின்னருள் பெறவேயாம் செய்தநற் புண்ணியம் யாதோ!
போற்றும் வகைபோற்றியே சிவயோகம் போற்றியே!

🙏🏽சிவம் சதாசிவம்

Comments